துருவங்கள் 16 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன். தற்போது அவர் இயக்கி
வரும் படம் நரகாசூரன். இதில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மியா, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமார்
உள்பட பலர் நடிக்கிறார்கள்.

துருவங்கள் 16 படம் போன்றே இதுவும் ஊட்டி பின்னணியில் உருவாகும் கிரைம் த்ரில்லர். கடந்த
செப்டம்பர் 15ந் தேதி ஊட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பில் சந்தீப்
கிஷன், ஆத்மிகா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட
படப்பிடிப்புகள் நடந்தது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் குமார் (பிருத்விராஜின் சகோதரர்)
சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் படிப்பிடிப்பு
பணிகள் முடிந்து விடும் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
படத்தை 2018 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தில் கிராபிக்ஸ்
காட்சிகளுக்கும், சிறப்பு சப்தங்களுக்கும் நிறைய கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதனால்தான்
படப்பிடிப்பு முடிந்தாலும் படத்தை கோடை விடுமுறையில் வெளியிடுவதாகவும் தயாரிப்பு தரப்பு
தெரிவிக்கிறது.