ஆரவ் திருமணத்திற்கு வராதது ஏன்?- முதன்முறையாக பேசிய ஓவியா

பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் ஹைலைட்டான நபரே ஓவியா தான். அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஆரவ்வை காதலித்தார், ஆனால் அவர் நடிகையை காதலிக்கவில்லை.

எனவே அந்த ஒரு பிரச்சனையால் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் தான் நடிகர் ஆரவிற்கு கடந்த சில மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது, பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டார்கள் ஆனால் ஓவியா இல்லை.

அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஓவியாவிடம், ஆரவ் திருமணத்திற்கு ஏன் வரவில்லை என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு ஓவியா, அப்போது நான் விடுமுறைக்காக வெளியே இருந்தேன், அதனால் வர முடியவில்லை. முடிந்தது முடிந்துவிட்டது இனி அதைப்பற்றி யாரும் கேட்காதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

Pooja Hegde HQ PhotoShoot