தனுஷின்கொலவெறி’ பாடலை கிரிக்கெட் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் மீண்டும் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

hardik pandiya krunal

தனுஷ்-அனிருத் கூட்டணியின் முதல் படமான ‘3’ படம், கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்தது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்த இந்தப் படம் மூலம் அனிருத் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கொலவெறி’ பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16-ல் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் பாடல் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் உலகப் புகழ் பெற்றனர். யுடியூபில் மொழி பேதமின்றி இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் ‘கொலவெறி’ பாடலை கிரிக்கெட் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் மீண்டும் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இருவரும் கைப்பேசியில் வரிகளை பார்த்தவாறு ‘கொலவெறி’ பாடலை பாடுகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாண்டியா சகோதரர்களின் ‘கொலவெறி’ வெர்ஷனை பார்த்து ரசித்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.