நடிகர் சிம்பு மாநாடு படத்தில் விரைவில் நடிக்க துவங்கவுள்ளார். அதற்காக உடல் எடையை குறைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சிம்பு அடுத்து இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி சேர்கிறார் என கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. ஆனால் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக இருக்கிறார். அதனால் சிம்பு பற்றி பரவிய செய்தி உண்மையா என்கிற கேள்வி எழுந்தது.

இது பற்றி விசாரிக்கையில், மணிரத்னம் சிம்பு படத்தை தயாரிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி மணிரத்தினம் தான் கதை எழுதுகிறாராம். அவரது உதவியாளர் ஒருவர் அந்த கதையை இயக்குகிறார் என தெரிவித்துள்ளனர்.