ரஜினி, அஜித், விஜய்யை நேரில் சந்திக்க உள்ளோம்: ஆர்.கே.செல்வமணி பேட்டி!

கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து சினிமா பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியானது. இதனை அடுத்து திரையுலகினர் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தனர்.

குறிப்பாக ரஜினிகாந்த் 50 லட்சம், ராகவா லாரன்ஸ் 50 லட்சம், விஜய் 25 லட்சம், அஜித் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், தனுஷ் 15 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், சிவகுமார் குடும்பம் 90 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், உதயநிதி 10 லட்சம், விஜய்சேதுபதி 10 லட்சம் என லட்சக்கணக்கில் திரையுலக பிரபலங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இது குறித்து தற்போது பேட்டி அளித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் ’கொரோனா காலத்தில் திரையுலகைச் சார்ந்தவர்கள் சுமார் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் பெப்சி அமைப்பின் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Gautham Vasudev Menon Movie Love Hits